உள்நாடு

ஜனசெத்த பெரமுன இன்று கண்டியில் வேட்பு

மனுத்தாக்கல்வண. பத்தரமுல்ல சீலரத்ன தேரரை தலைவராகக் கொண்ட ஜனசெத்த பெரமுன இன்று(8) பொதுத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

இதுவே கண்டி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் வேட்பு மனுவாகும்.கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் முன்னிலையிலேயே இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்முறை நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஜனசெத்த பெரமுன தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *