உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட தலைவரின் பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறந்து வைப்பு

 ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி அஜித்  பெரேராவின் பாராளுமன்ற தேர்தல் பணிமனை பண்டாரகம, பாணந்துறை வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

       இந்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன ராஜகருணா,  முன்னாள் இராணுவ தளபதி, மகேஷ் சேனாநாயக்க,   ஐக்கிய மக்கள் சக்தியின் பாணந்துறை அமைப்பாளர்களான உபாலி சுரவீர, தீப்தி அபேவிக்ரம, இந்திக கால்லகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

      முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,ஹர்ஷன ராஜகருணா, பாணந்துறை அமைப்பாளர் உபாலி சுரவீர ஆகியோரும் உரையாற்றினர். பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் நவுசாத் மன்சூர் உள்ளிட்ட  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்  பிரமுகர்கள் பலரும் உரையாற்றினர்.

     எம்.எஸ். எம்.முன்தஸிர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *