உள்நாடு

அம்பியூலன்ஸ் வண்டியில் மோதுண்ட நபர் ஸ்தலத்திலேயே பலி

பேராதனை வைத்தியசாலையிலிருந்து கேகாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரத்த வங்கி கடமையில் ஈடுபட்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் மோதுண்டஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் கண்டி கொழும்பு பிரதான வீதியில் கேகாலை மொளகொட என்ற இடத்தில் (7) இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த முச்சக்கர வண்டி சாரதிகள் இந்த நபரை உடனடியாக கேகாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அங்கு இவர் மரணித்த நிலையிலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

40 -50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் தொடர்பான தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *