உள்நாடு

குடும்ப தகராறில் கணவன் கொலை; மனைவி கைது

நொச்சியாகம பொலிஸ் பகுதிக்குட் பட்ட வல்பலகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நொச்சியாகம வல்பலகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மதுபோதையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உயிரிழந்துள்ளவர் மதுபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் அயலவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதுன் போது மனைவி உயிரிழந்த கணவனின் வாயை துணியால் கட்ட முற்பட்ட போது கணவன் மயக்கமடைந்துள்ளார்.இதனையடுத்து மயக்கமடைந்த கணவன் வைத்தியசாலைக்கு கோண்டு சென்ற பின்னர் கணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *