உள்நாடு

நுரைச்சோலை பிரதேசத்தில் பீடி இலைகளுடன் லொறி மற்றும் வேனுடன் ஒருவர் கைது

கல்பிட்டி நுரைச்சோலை பிரதேசத்தில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 2500 கிலோ பீடி இலைகளுடன் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லொறி மற்றும் வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜீவன் குமாரவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

(முஸ்பிக் – புத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *