விளையாட்டு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா 2026 வரை நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அவ்வறிவிப்பில் , “இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா பொறுப்பேற்றிருந்த இந்தியாஇ இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதற்கமைய சனத் ஜெயசூர்யா 2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத் தொடர் வரை இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இவ்வருடம் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை இருக்கும்.” என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் சபை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *