உள்நாடு

அக்குறணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சாகித்திய விழா

அக்குறணை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட பிராந்திய சாகித்திய விழா
அக்குறணைப் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் வருடாந்தம் நடத்தப்படும் சாஹித்திய விழா அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று (4) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக சிங்கள மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நிமல் விஜயசிரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.


இதில் சிறப்பு விருந்தினர்களாக அக்குறணை ஐடெக் கல்வி நிலையத்தின் இயக்குனர் ஐ. ஐனுடீன், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், அக்குறணை வர்த்தகப் பிரமுகர்கள் பாடசாலை மாணவர் மாணவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.


இதில் விடேசமாக அக்குறணை சி. எஸ். எம். விசேட தேவையுடைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிங்கள. தமிழ் பாரம்பரிய நடனங்கள் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *