உள்நாடு

புத்தளம் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கியது சட்டவிரோத சிகரெட்

புத்தளம் விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அந்தச் சோதனையின் போது, ​​வெளிநாடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யத் தயார்படுத்தப்பட்டிருந்த 101 சட்டவிரோத சிகரெட் மூட்டைகளில் (சிகரெட் 2020) கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபரிடம் இருந்த சிகரெட்டுகள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதுடன், இரகசிய முகவர் ஒருவரை பயன்படுத்தி சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வவுனியாவைச் சேர்ந்த 54 வயதுடையவர்.
சந்தேகநபரும் சிகரெட் பெட்டிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

(முஸ்பிக் – புத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *