Uncategorized

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ஹரின் ஜனாஸா இன்றிரவு நல்லடக்கம்.

ஜனாஸா அறிவித்தல்

*05 /10/2024 Saturday

*சாய்ந்தமருது 17 மாளிகா வீதியில் வசித்து வந்த ஒய்வு பெற்ற ஆசிரியரும் ஊடகவியலாளருமான அஸ்கர் ஆசிரியர் சற்று முன் வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்

அன்னாரின் ஜனாஸாத் தொழுகை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் உதயம் பத்திரிகை, உதயம் இணையத்தின் செய்தியாளருமான அஸ்ஹர் இப்றாஹீம் இன்று காலை காலமானார்.அவரின் ஜனாஸா இன்றிரவு 11.00 மணியளவில் மாளிகைக்காடு மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மல்வானை மத்திய கல்லூரி, கல்முனை சாஹிரா கல்லூரி, பட்டிருப்பு தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர் சகலருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகினார்.

சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டிய இவர் ஊடகத் துறைக்கும் பெரும் பங்களிப்புச் செய்தார். இவரின் மறைவு குறித்து உதயம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை அவரின் மறுமை வாழ்வு இறைவனின் பொருத்தத்தைப் பெற்றதாக அமைய பிரார்த்திக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *