Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இம்முறை பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் குழுக்களின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளத்தக்க புரிந்துணர்வும் முன்மாதிரியும் கொண்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் என்றும்
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கைககள்
எதிர்வரும் 10 ஆந் திகதியில் இருந்து மாவட்டமெங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *