Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் புத்தாக்கக் கண்காட்சியும்  சிறுவர் சந்தையும் பிரதேச செயலாளரால் திறந்து வைப்பு..!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் புத்தாக்கக் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் நிகழ்வுகள் ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 01.10.2024 இடம்பெற்றது.

குழந்தைகளின் சோலை இஸ்லாமியப் பாலர் பாடசாலை மற்றும் ஸாறா  பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிருவாகப் பணிப்பாளரும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் விரிவுரையாளருமாகிய அஷ்ஷேஹ்  எம்.எல். அப்துல் வாஜித் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் மற்றும் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் ஆகியோர் வைபரீதியாகத் திறந்து வைத்தனர்.

அங்கு சிறார்களின் தலைமையில் புத்தாக்கக் கைவினைப் பொருள் கண்காட்சியும் பல்வகைப் பொருட்களின் மலிவு விலைச் சந்தையும் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பிரதேசச் செயலாளர் நிஹாறா, “சிறார்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து சிறந்த தலைமைத்துவப் பண்புள்ள புத்தாக்குநர்களை உருவாக்க உதவும்” என்றார். நிகழ்வில் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் இனிப்புப் பண்டங்களும் பரிசுகளும் வழங்டகப்பட்டன.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *