உள்நாடு

கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 40 யானைகளும் மின்சாரம் தாக்கி 31 யானைகளும் ரயிலில் மோதி 05 யானைகளும் வீதி விபத்துக்களில் சிக்கி 06 யானைகளும் நீரில் மூழ்கி 11 யானைகளும் ஏனைய விபத்துக்களின் மூலம் 07 யானைகளும் உயிரிழந்துள்ளது.

குறிப்பாக இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் 184 மணித உயிரிழப்புகள் பதிவாயிருந்ததாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *