உள்நாடு

இலங்கையை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று முன்னர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வந்துள்ளனர். புதிய அரசாங்கம் கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *