உள்நாடு

முஅத்தீன் இக்பாலுக்கு கௌரவிப்பு

மத்திய முகாம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 15 வருட காலம் தொடர்ச்சியாக பணியாற்றிய முஅத்தீன் எம்.ஏ.முஹம்மது இக்பால்யினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04) ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்று.

பள்ளிவாசல் தலைவர் எம்.சி.எம்.பயாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைவரினால் முஅத்தீன் முஹம்மது இக்பாலுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதோடு, பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.பி.ரிபாஸ், செயலாளர் கே.எல்.ரிஸான், பொருளாளர் எம்.எஸ்.எம்.இக்பால், ஆகியோரால் அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தனவந்தர்கள், பொது அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரினாலும் பணப் பரிசுகள் முஅத்தினுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

15வருட காலம் சிறப்பாக சேவை செய்யக்கிடைத்தமை இறைவன் கொடுத்த அருட்கொடை என்றும், அன்பளிப்பு மற்றும் பணப் பரிசு வழங்கி கௌரவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முஅத்தீன் முஹம்மது இக்பால் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், தனவந்தர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *