உள்நாடு

கோபியாவத்த மாதர் ஒன்றியத்தின் மீலாத் விழா நிகழ்வு

பேருவளை கோபியாவத்த மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான மீலாத் விழா எதிர்வரும் 6 ஆம் திகதி (06-10-2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகும்.

காலை 9:00 மணிக்கு புனித ஸுப்ஹான மெளலூத் மஜ்லிஸுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். கிராஅத், கஸீதா, பேச்சு, உரையாடல், அறிவுக் களஞ்சியம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தலைவர் தேசமான்ய பாஸி ஸுபைர் தெரிவித்தார்.

மாலை 4:00 மணிக்கு பரிசளிப்பு விழாவும், மார்க்கச் சொற்பொழிவும் இடம்பெறும். பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலை அதிபர் எஸ்.ஏ குமார் பிரதம அதிதியாகவும், மொல்லியமலை ஹிழ்ரியா பள்ளிவாசல் கதீப் முஸ்லிம் விவாகப் பதிவாளர் மெளலவி எம்.எஸ்.எம் பாஸில் (அஷ்ரபி-அம்ஜதி) சிறப்புப் பேச்சாளராகவும் பங்குபற்றுவர்.

உலமாக்கள், மாதர் ஒன்றிய நிர்வாகிகள், பிரதேசவாசிகள் நிகழ்வில் பங்குபற்றுவர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *