உள்நாடு

அரசியலுக்கு விடைகொடுத்து சினிமாவில் கால்பதிக்கப்போகும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக திரைப்படம் தயாரிப்பது போன்ற அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் ஹோமாகம பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை பேச்சாளர், இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளிலும் கடமையாற்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்தப் பதவிகளின் மூலம் மக்களுக்குத் தன்னால் இயன்றவரை சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்த பந்துல குணவர்தன, ஹோமாகம பிரதேசத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்ததில் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.

திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஆர்வத்துடன், எதிர்வரும் ஆண்டுகளில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர விரும்புவதாகவும், இதன் காரணமாக பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *