உள்நாடு

தலைப் பிறை தென்படவில்லை.றபீஉல் ஆகிர் சனி முதல் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 றபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஒக்டோபர் 03 ஆம் திகதி வியாழக்கிழமை கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.


இதன்போது எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ரபியுல் அவ்வல் மாதத்தை நாளை வெள்ளிக்கிழமை 04 ஆம் திகதி 30ஆக பூர்த்தி செய்து நாளை மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரபியுனில் ஆகிர் மாதம் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் தலைவர் தலைவர் மெளலவி அஷ் ஷெய்க் ஹிஷாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.


கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், n பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி, ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *