உள்நாடு

பரீட்சைகள் திணைக்களம் மறுசீரமைக்கப்பட வேண்டும்; ஜோசப் ஸ்டாலின்

மோசடிகளை மேற்கோள்காட்டி பரீட்சைகள் திணைக்களத்தை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் தேர்வு தொடர்பான மோசடியில் ஈடுபட்டோரின் பெயர்களை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் வெளியிட்டார். தேர்வு தொடர்பான பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 473 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் எந்த தேர்விலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. வலய பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பட்டியலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது அவசியமானது என ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *