உள்நாடு

காத்தான்குடி நகரசபைக்கு தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

காத்தான்குடி நகர சபையின் நீண்ட காலத் தேவையாக காணப்படும் தீ விபத்து மீட்பு பிரிவுக்கான தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொழும்பு மாநகர சபை அன்பளிப்பு செய்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணீ ஜயவர்தன அவர்களால் காத்தான்குடி நகர சபை கணக்காளர் அஹ்ஸன் தலைமையிலான குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.

எமது நகரின் நீண்டகால தேவையொன்று நிறைவேறும் இச் சந்தர்ப்பத்துக்காக கடந்த நகரசபை பதவிக்காலத்தில் பாடுபட்ட முன்னாள் நகர முதல்வர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும் இதற்காக பல வழிகளிலும் முயற்சித்த அனைவரும் சபையின் செயலாளர் றிப்கா ஷபீன் அவர்களால் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *