உள்நாடு

கண்டி சித்திலெப்பை கல்லூரியில் முதற்தடவையாக நீச்சல் பயிற்சிகள் ஆரம்பம்

கண்டி சித்திலெப்பை கல்லூரியின் வரலாற்றில் முதற்தடவையாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்லூரியின் அதிபர் எம்.ஏ.அலீம் நேற்று (2) கல்லூரியில் முதல் குழுவொன்றை நீச்சல் பயிற்சியில் இணைத்துக் கொண்டார்.

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளையடுத்து கிங்ஸ்வூட் நீச்சல் தடாகத்தில் சித்திலெப்பை கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


சித்திலெப்பை கல்லூரி மாணவர்களுக்கான ஏனைய விளையாட்டுப் பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.


(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *