உள்நாடு

கெஹெலிய மீதான வழக்கு; நவம்பர் 29ல் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன்படி, இந்த வழக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *