உள்நாடு

எரிபொருள் போதியளவு கையிறுப்பில் உள்ளது; எரிபொருள் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்- CPC தலைவர் டி.ஜே. கருணாரத்ன

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) போதியளவு கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருவதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன, பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாரத்ன, “சரக்கு பராமரிப்பு அட்டவணையை வாராந்திர அடிப்படையில் நிர்ணயித்து, நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான எதிர்கால திட்டங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ளது.

எரிபொருள் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதுகாக்கப்படுகின்றன, அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை விநியோகங்களைத் திட்டமிட்டுள்ளோம், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.” என்று அவர் கூறினார்.

அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒரு விலை சூத்திரம் இன்றியமையாதது, எதையும் மறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது தொடர்பாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.” என்றார்.

மின்சார விலை நிர்ணயம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறதோ அதேபோன்று எரிபொருள் விலை நிர்ணயத்தை மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கருணாரத்ன தெரிவித்தார். இந்த புதிய அமைப்பு விலை நிர்ணய செயல்முறையை பொது ஆய்வுக்கு உட்படுத்தும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்,

தற்போது இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த கருணாரத்ன, அவற்றின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.

சில உள்ளூர் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *