உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் முப்பெரும் விழா

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுவர்தின முதியோர் வார நிகழ்வும் “வேர்கள்” சஞ்சிகை வெளியீடும் என முப்பெரும் விழா நேற்று (01) பிற்பகல் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.முகம்மட் ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எம்.எம்.தாஹிர் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக ஓட்டமாவடி மக்கள் வங்கி முகாமையாளர் பீ.எஸ்.கிருஸ்டி, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எம்.ஜுனைடீன், எப்.பி.ஏ ஸ்ரீலங்கா அமைப்பின் சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச். இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலகத்தினால் சிறுவர் கழங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட முதியோருக்கும் வறிய சிறுவர்களுக்குமான அன்பளிப்புப்பொருட்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலகத்தினால் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் “வேர்கள்” சஞ்சிகையின் 18வது மலர் வெளியீடும் இடம்பெற்றது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *