உள்நாடு

நவலோகா வீட்டுத் தொகுதியில் தீ விபத்து

கொழும்பு 12 வாழைதத்தோட்டம் டயஸ் பிளேசில் உள்ள நவலோகா தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் இன்று மாலை (01) ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் உடநடியாக செயற்பட்டதற்கு அமைய தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் உட்புறத்தில் உள்ள மின் மானிகள் பொருத்தப்பட்டிருந்த பகுதிக்குள் தீ ஏற்பட்டு பாரியளவில் எரியத் தொடங்கியதைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் உடநடியாக குறித்த இடத்தற்கு வருகை தந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

தீயின் காரணமாக பல மின்மானிகள் சேதமடைந்துள்ளதுடன் மின் இணைப்பு வயர்களும் எரிந்து சேதமடைந்துள்ளது.

கொழும்பு 12 வெல்ல வீதி பொலிஸாரும் ஸ்தளத்திற்கு வருகை தந்து தீ ஏற்பட்டதற்கான விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *