உள்நாடு

ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசூரிய பதுளை ‘அன்வர்’ பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம்

ஊவா மாகாண புதிய ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர பதுளை நகர் ‘மஸ்ஜிதுல் அன்வர்’ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தார். ஆளுநர் கபில ஜயசேகரவுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சமூகம் சார்பில் வரவேற்பளித்தது.


அன்வர் பள்ளி இணை இமாம் அல்-ஹாஃபிஸ் தஸ்னீம் தாஹிரின் (ஹாஷிமி) கிராஅத்தோடும், பள்ளித் தலைவர் இம்தியாஸ் பக்கீர்டீனின் வரவேற்புரையோடும் ஆரம்பமான இந் நிகழ்வில் ஆளுநர் கபில விசேட உரையை நிகழ்த்தினார்.
பதுளுப்பிட்டிய ‘முஜாஹிதீன்’ பிரதம இமாம் அல் – ஹாபிஸ் இர்ஷாத் நஸார் (உஸ்மானி) துஆப் பிரார்த்தனை புரிந்தார்.


நிகழ்வில் மாகாண உயர் அதிகாரிகள், பிரதம இமாம் அல்-ஹாபிஸ் லுத்ஃபுல் அலீம், பதுளைக் கிளை உலமா சபைத் தலைவர் ஷிபான் யூசுப் ஸஹ்ல் (ஹிழ்ரி) உள்ளிட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், கல்வியியலாளர்கள், சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். விருந்துபசாரமும் வழங்கப்பட்டிருந்தது.



(அப்துல் வாஹிட் ஏ. குத்தூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *