உள்நாடு

முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட விஷேட தீர்மானங்கள்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை அமைச்சரவை தனது முதல் தீர்மானமாக அங்கீகரித்துள்ளது.

“அடுத்த தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலாக 6 பில்லியன் ரூபா வரவுள்ள நிலையில் மொத்தம் 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மொத்த செலவு 11 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது” என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இரண்டாவது முடிவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *