உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மரம் நடுகை

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (01) மரம் நடுகை நிகழ்வு பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது பாடசாலையின் அதிபர் யூ.எம்.எம் அமீர், நிர்வாக பொறுப்பான பிரதி அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் மற்றும் கல்வி விருத்திக்கு பொறுப்பான பிரதி அதிபர் எஸ்.எப் சாஜினாஸ் ஆகியோரால் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் வகுப்பு ரீதியாக மாணவர் மாணவிகளுக்கான களப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹுசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *