உள்நாடு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தவும் : சஜித் பிரேமதாஸ கோரிக்கை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.


சஜித் பிரேமதாஸ மேலும் தனது அறிக்கையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அனைத்து மாணவர்களுக்கும் நியாயத்தன்மையை உறுதி செய்யும் வகையில் புதிதாக பரீட்சையை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.


இலங்கையின் தேசியப் பரீட்சை முறைமையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை மேலும் வலியுறுத்தினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *