உள்நாடு

பிரதமர் கண்டி கட்டுகலை மஸ்ஜிதுக்கு விஜயம்

புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (28) கண்டி கட்டுகலை ஜும்மா மஸ்ஜிதுக்கு விஜயம் செய்தார்.

மஸ்ஜிதில் இடம் பெற்ற விசேட துஆ பிரார்த்தனை நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.

கண்டியிலும் கண்டியை அண்மித்த இடங்களையும் சேர்ந்த உலமாக்கள் சமூக நல இயக்கப் பிரமுகர்கள் கண்டி கட்டுகலை வை.எம்.எம்.ஏ பிரமுகர்கள், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்க பிரமுகர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள் வர்த்தகர்கள், பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மஸ்ஜித் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் அப்சல் மரிக்கார் வரவேற்புரை நிகழ்த்த மௌலவி எம். இர்ஷாத் துஆ பிரார்த்தனை நடத்தினார்.கண்டி
மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் கே. டி சித்தீக் உட்பட உலமா சபை பிரமுகர்கள் பலரும் இங்கு கலந்து கொண்டளர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *