தோட்டாக்களுடன் 4 மெகஸின்கள் மீட்பு
அலயாப்பத்துவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட இல 304 கல்கடவல மல்வத்து ஒயா அணைகட்டின் கீழ் 120 ரீ 56 வகை தோட்டாக்களுடன் நான்கு மெகசின்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மல்வத்து ஒயா கல்கடவல பகுதியைச் சேர்ந்த ஒருவர் குறித்த பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற போது நீர் வாய்க்காலில் சேற்று குட்டையில் இந்த நான்கு மெக்சிகன் களை கண்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் கல்கடவல கடற்படை முகாம் அதிகாரிகளிடம் தெரிவித்ததனையடுத்து கடற் படையினர் தோட்டாக்கள் அடங்கிய நான்கு மெக்சின்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த தோட்டாக்களை இந்த இடத்தில் வைத்த நபர் தொடர்பில் இதுவரைக்கும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)