உள்நாடு

சாதாரண தர மீளாய்வு; செவ்வாய் முதல் விண்ணப்பிக்கலாம்

தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சை பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களுக்குப் பிரவேசித்து பரீட்சார்த்திகளின் சுட்டெண்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம், onlineexams.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக, சகல அதிபர்களுக்கும், தமக்கான பயநர் பெயரைப் பயன்படுத்தி பாடசாலைகளின் பெறுபேறு அட்டவணையைத் தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *