உள்நாடு

பொதுத் தேர்தல் குறித்து சீனன்கோட்டையில் கலந்துரையாடல்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் பெரு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனான விஷேட கலந்துரையாடலொன்று 29-09-2024 பேருவளை சீனன் கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

பேருவளை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் இப்திகார் ஜமீல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள் பங்குபற்றினர். பேருவளை பிரதேச சபை மற்றும் நகர சபை முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாஸ தலைமையில் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைப்போம் என இங்கு உரையாற்றிய பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *