Saturday, September 28, 2024
Latest:
உள்நாடு

பொல்கொல்ல அணைக்கட்டு போக்குவரத்து பாதை இடைநிறுத்தம்

பொல்கொல்ல நீர்த்தேக்க அணைக்கட்டுடனான போக்கு வரத்து பாதை தற்காலிகமாக போக்குவரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் வருடாந்த பராமரிப்பு பணிகள் தற்சமயம் இடம்பெறுவதால், பொல்கொல்ல நீர்த்தேக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை காலியாக இருக்கும் என பொல்கொல்ல நீர்த்தேக்க பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மகாவலி ஆற்றின் நீர்த்தேக்கத்திற்கு மேல் மற்றும் கீழ் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாத்ததும்பறை ஹாரிஸ்பத்துவ அக்குறணை, கலகெதர, ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *