Saturday, September 28, 2024
Latest:
உள்நாடு

நீதிக்காகவும்,மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தவர் குமார வெல்கம; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

இலங்கையின் அரசியலில் துணிந்து கருத்துக்களால் எதனையும் எதிர் கொள்ளக் கூடிய அரசியல்வாதியான குமார வெல்கம அவர்களின் இழப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும்,சக பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கம அவர்கள் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன், அப்பிரதேசத்த்தில் வாழும் மூவின மக்களினாலும் விரும்பக் கூடியவராக இருந்துவந்துள்ளார்.

இதே வேளை முஸ்லிம்கள் செறிந்துவாழும் வெலிகம பகுதி மக்களின் அதிகப் படியான வாக்குகள் கடந்த தேர்தல்களில் குமார வெல்கம அவர்களுக்கு அளிக்கப்பட்டமையானது,அப்பிரதேச முஸ்லிம்களுடன் அவருடைய இணக்கத்தினை எடுத்துகாட்டுகின்றது.

மக்களின் நன்மைக்காக தான் வகிக்கும் அமைச்சுப் பதவியினை கூட விட்டு சாதாராண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து துணிந்தும்,அச்சமின்றியும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமது ஆழமான கருத்தை தெரிவித்துவந்த ஒரு அரசியல்வாதியாக அமரர் குமார வெல்;கம அவர்களை காணமுடியும்.
குமார வெல்கம அவர்கள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 74 வயதில் மரணமாகியுள்ளார்.

அன்னாரது இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *