உள்நாடு

கண்டியிலும் சூழவுள்ள இடங்களிலும் இன்று நீர் வெட்டு

கண்டி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் 65 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளதையடுத்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இத்தகவலை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று செப்டம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.


கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பத்துவா, புஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை ஆகிய நீர் விநியோக அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


(.ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *