Uncategorized

மத்திய மாகாண ஆளுநர் இன்று பணிகளை ஆரம்பித்தார்

புதிய மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பேராசிரியர் சரத் பண்டார அபேகோன் இன்று (27)கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பித்தார்.

மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுலா மடஹபொல முன்னிலையில் பணிகளை ஆரம்பித்த இந்நிகழ்வு மிக எளிமையாக இடம்பெற்றது.

மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்டட செயலாளர் சந்தன தென்னகோன் ஆகியோரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு சுமார் 30 நிமிடத்தில் நிறைவுபெற்றது.

பேராசிரியர் அபேகோன் சில வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றியதோடு அதற்கு முன்னர் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றியமை குறிப்பிடத் தக்கது.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *