உள்நாடு

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்ற தற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

 இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது அண்டை நாடான இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை ஜனாதிபதி அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *