உள்நாடு

பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்..!

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்த துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அதிகாரியாவார்.

இதன்படி,பிரியந்த வீரசூரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வரை பல்வேறு பதவிகளில் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக பதில் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில் தற்போது நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *