உள்நாடு

சீனன்கோட்டை வடுகொடையில் தேசிய மக்கள் சக்தியின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக வாக்களிக்க பேருவளை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிய மற்றுமோர் மக்கள் சந்திப்பு 25 ஆம் திகதி (2024-09-25) பேருவளை சீனங்கோட்டை வடுகொடை ஷேக். இப்ராஹிம் மாவத்தையில் உள்ள இமாம் ஜெம்ஸ் திடலில் ஈஸான் பாஸி தலைமையில் நடை பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையும் இதன் போது இங்கு சமூகமளித்தோர் ஸ்கிரீன் வாயிலாக பார்வையிட்டனர்.

செழிப்பான நாட்டை உருவாக்க வேண்டி அனைவரும் தன்னோடு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உரையில் அழைப்பு விடுத்த போது இங்கு கூடியிருந்த மக்கள் கை தட்டி கரகோஷம் செய்தனர்.

பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட முக்கியஸ்தருமான அல்-ஹாஜ் அரூஸ் அஸாத் உட்பட பலரும் இங்கு பேசினர். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பேருவளை வாழ் மக்களுக்கு நன்றி கூறுவதாக இங்கு உரையாற்றிய பலரும் தெரிவித்தனர்.

புதிய ஜனாதிபதியோடு நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என பேருவளை தகர சபை முன்னாள் உறுப்பினர் அரூஸ் அஸாத் கூறினார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஜனாதிபதியின் பயணத்தை தொடர இடமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *