உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பொதுத் தேர்தலுக்கு முன் முக்கிய புள்ளிகள் கைது?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதனடிப்படையில் ஏற்கெனவே நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை கருத்தில் கொண்டு புதியதொரு குழு மூலம் விசாரணைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் போது இதனோடு தொடர்புடைய முக்கிய புள்ளிகள் பலர் கைதாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது பேராயர் மல்கம் ரஞ்சித் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கேட்டிருந்தார்.