உள்நாடு

போலி நகைககளை அடகு வைத்த பெண் கைது

தங்க முலாம் பூசப்பட்ட மற்றும் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா தோட்டத்தில் வசிக்கும் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கொழும்பு பிரதேசத்தில் பணிபுரியும் சந்தேகத்திற்குரிய பெண், போலி தங்க முலாம் பூசப்பட்ட சிறிய மோதிரங்கள், பஞ்சாயுதங்கள், காதணிகள் போன்றவற்றை அடமான நிலையங்கள், தோட்டங்களைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு எடுத்துச் சென்று அடகு வைக்கும் மோசடியை மேற்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை ஹட்டன் நீதின்றில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் அக்டோபர் 9 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *