உள்நாடு

வினாத்தாள் கசிவினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

பிரதமர் ஹரிணி வேண்டுகோள்

வினாத்தால் கசிவினால் சிறுவர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது நிவர்த்திக்கப்பட வேண்டும். உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகள் மத்தியில் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் ஆகியன குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை கழையப்பட வேண்டும்.இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாடசாலை கல்வியின் மேம்பாடு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *