உள்நாடு

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் ஒரு பக்கம் காலை வைத்து பயணிப்பது தடை; புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு

“காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம், விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்” என, காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ். ஜெயலத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, “பின் ஆசனத்தில் இருப்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும். ஒரு பக்கம் காலை வைத்து செல்கின்ற வேளையில், பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அண்மையில் கூட, மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சம்மாந்துறை மாணவி ஒருவர், பரிதாபமாகப் பலியாகி இருக்கிறார். மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, பின் ஆசனத்தில் அமர்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்துச் செல்ல வேண்டும் என்பது சட்டம்.

எனவே, காரைதீவு பகுதியில் இடம்பெறும் அநியாயமான உயிரிழப்புக்களைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால், இந்தச் சட்டம் மிக விரைவில் அமுலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு முன்னதாக, இந்த அறிவித்தலை பொதுமக்களுக்கு விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *