உள்நாடு

மத்திய மாகாண ஆளுநர் நாளை பணிகளை ஆரம்பிப்பார்

புதிய மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பேராசிரியர் சரத் பண்டார அபேகோன் நாளை (27)கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பிக்க உள்ளார்.

பேராசிரியர் அபேகோன் சில வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றியதோடு அதற்கு முன்னர் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.

புதிய ஆளுநர் பதவியேற்றதன் பின்னர் மாகாண அரசாங்க சேவையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக மத்திய மாகாண அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *