உள்நாடு

மாகாண ஆளுநர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வட மகாண ஆளுநராக முன்னாள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான என்.வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக முன்னாள் நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

 சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *