உள்நாடு

பாஸ்போர்ட் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

“கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பதவியேற்றதன் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒக்டோபர் மாதத்திற்குள் வரிசையை நிறைவு செய்ய முடியும் என, பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வரிசையை நீக்குவதற்கு மாற்று யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறும், தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முன் மொழிவுகள் கிடைத்ததன் பின்னர், மாற்று வழிகளுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *