உள்நாடு

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


‘ஈ-விசா’ வழங்கும் நடவடிக்கையை, இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நடை முறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


குறித்த வழக்கு, இன்று (25) அழைக்கப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து, குடிவரவு குடியகல்வு அதிகாரியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த மனு, ஜனவரி 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *