உள்நாடு

பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியீட்டி மக்களுக்கு விமோசனம் பெற்றுத்தர வேண்டும்; சிவன் பவுண்டேசன் இயக்குனர் அனுரவுக்கு வாழ்த்து

நாட்டில் சமூக நீதியையும் மற்றும் ஊழலுக்கு எதிரான நாட்டையும் கட்டியெழுப்புகின்ற வெற்றியாகவே புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக அவர்களுடைய வெற்றி பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. அதே சமயம் அவர் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள வர்க்கத்தினருக்கு விமோசனத்தைப் பெற்றுத் தரும் சிறந்த தலைவராக தொடர்ந்து மிளிர வேண்டும் என நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் ஏன்று சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் விடுத்த வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் புரையோடிக் காணப்படுகின்ற சமூக நீதியையும் மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியையும் இல்லாமற் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு நற்செய்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு பலப்பரீட்சையான தேர்தல் என்று குறிப்பிடலாம்.

இதற்கு நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து அநுர குமார திசாநாயக அவர்களை வெற்றிபெற செய்துள்ளார்கள். இது ஒரு மகத்தான வெற்றியாகும். எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கொள்கைப் பிரகடனத்தின் ஊடாகவே இத்தேர்தலை தேசிpய மக்கள் சக்தி வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும். இது நாட்டுக்கு சுவிட்சத்தையும் விமேசானத்தையும் ;ஈட்டித் தரும் என்பதோடு கடந்த காலங்களில் மோசடியான அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்த அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதையும் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தல் வெளிப்படுத்தும்.

அந்த வகையில் சகல மக்களையும் உள்ளீர்த்துக் கொண்ட. ஜனாதிபதியின் தலைமைத்துவப் பண்புகள் ஆரம்ப வைபவங்களில் வெளிப்பட்டு நிற்கின்றன எனவே அவருடைய அரசியல் பயணம் நீண்டு நிலைக்க நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *