உள்நாடு

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக, கலாநிதி நஜித் இந்திக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


கலாநிதி நஜித் இந்திக்க, ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளவருமாவார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அரசு வைத்தியசாலைகளில் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார்.


டாக்டர் நஜித் இந்திக்க, தனது மருத்துவ வாழ்க்கைக்கு மேலதிகமாக ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *