உள்நாடு

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் கட்சியில் இடமில்லை; மொட்டுக் கட்சி திட்டவட்டம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அறிவித்துள்ளது.

“கட்சி தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று நெலும் மாவத்தையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்களா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்தது. முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலர் மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.” என மொட்டுக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *